Saturday, May 22, 2010

கொடை பயணம் ( KODAI TRIP)

கொடை பயணம் ( KODAI TRIP)
கோடை வெய்யிலின் சூட்டை தனிக்க
கொடைக் கானலுக்கு...

சென்னையிலிருந்து...
தன்னார்வலர்கள் பலபேரானாலும்
தயாரானது ஒரு ஜதை

இரவினில் பயணம்
காலையில் குட்மார்னிங்
விடைபெற்றது சென்னை மாநகரம்
விடிந்தது திண்டுக்கல்லில்
தயாராக காத்திருந்தது குட்டி பேருந்து
பசியார தோசையும், பூரியும், காபியும்
புசித்து விட்டு பேருந்து படியேறினோம் மலை நோக்கி . . .

இயற்கை எழில் கொஞ்சும்
இருபுறமும் மலைகள்
இறச்சலிடும் பறவைகள்
வின்னைமுட்டும் மரங்கள்
வியக்கவைக்கும் இயற்கையின்
விசித்திரங்கள்...
வசந்ததின் வாயில்
திறக்கப் படுகிறது
திறவுகோளாய் எங்களின் சத்தம்.

வரவேற்பு எங்களுக்கு...
தாரை தப்பட்டைகள் பட்டையை கிளப்ப
பட்டாசு சத்தங்கள் வின்னை பிளக்க
பேண்டு வாத்தியங்கள் பின்னியெடுக்க (அப்படியா?)
அடடா இது கனவா !?
பேருந்தில் கொஞ்சம் தூங்கியதன் விளைவு !
இவையெதுவுமின்றி
வாஞ்ஞையுடம் வரவேற்ற
டாக்டரும், உற்றோரும்...

வந்த களைப்பு
வழித்தடம் தெரியாமல் போக
நின்ற இடம் சொர்க்கபுரியாய் !
கோவைக் குசும்புகளும்
கோர்வையாய் சேர்ந்துவிட
கோலாகலமாய் புறப்பட்டது
எங்களின் பேருந்து
மலை நோக்கி மந்தமாய்...

மத்தியான சாப்பாடு
மீனாட்சி பவனில்
அரங்கு நிறைந்த காட்சி
காத்திருந்த நாங்கள் சாட்சி
பளபளப்பு மீனாட்சி
பந்தியில் மின்னவில்லை
வியர்வை சிந்தி உண்டோம்
விரயமானது காலம்...

1872 ல் கோக்கர் கட்டிய பாதை
நாங்கள் நடந்ததால்
விமோச்சனம் பெற்றது(அவ்வளவு நல்லவனா நீயி)
ஆனாலும் அற்புதம் - வென்
மேக மண்டலத்துள்-நாங்கள்
வெள்ளையாடை தரிக்காத
தேவர்கள் தேவதைகள்! (நெசமாத்தாங்க)
வெள்ளைக்காரன் கட்டாவிட்டாலும்!
அடிமையாகயாகத்தான் இருப்போம்-அந்த
வென்மேக கூந்தல்காரிக்கு...

நடைபாதையில் நாங்கள்...
கன்னிகளை கண்களால் சுட்டோம்
"கன்"னால் பலூனையும் சுட்டோம்!
கைக்குட்டை தரையில் போட்டு
கைசெலவுக்கு சில்லரை பார்த்தோம்!
மாறும் முகம் மறைக்க
முகமூடிதான் அணிந்தோம்,
ஜோடியாய் வந்தவர்களும்-எங்களுடன்
சோக்காளியாய் திரிந்தனரே !

படகுப் சவாரி...
படகுப் சவாரி போக போரோமென்று
குதிரை சவாரி சென்று
குதூகலம் அடைந்து நின்றோம்!
மிதிவண்டி மிதித்துச்சென்று
மின்னலுக்கு வலைவிரித்தோம்!
வான்மேகம் வழி மறித்தோம்
வாயினால் புகையை விட்டு
வயதினை மறந்து மகிழ்ந்தோம்!
திரண்ட வந்தது கருமேகம்
நனைந்து போனது எங்கள் தேகம்!
குடைக்குள்ளே மழையாய்
ஒழுகியது படகு குழாம்
படகு சவாரிக்கு தற்காலிக ஒத்திவைப்பு !
சுதியின்றி தவித்த மக்கள்
குளிருக்கு சொட்டர் போட்டோம்

இரவு சாப்பாட்டுக்கு
அல்டாப்பு பண்ணிக்கொண்டு
ஹில்டாப்பு ஹோட்டல் போனோம்.

இரண்டாம் நாள்

சில்லிட்ட தண்ணீரில்
சிலையாகிப் போகமறுத்து
கடன்களை முடித்து விட்டு
கதிரவனை எழுப்பினோம் ! (அப்போ குளிக்கலையா.... அடப்பாவிங்களா !)
சுருங்கிய தேகத்துடன்
சுடசுட தேனீர்
தேகத்தை விரைப்பாக்கி
தேமேன்னு கிளம்பினோம்-காலை உணவு

பேரிஜம் செல்ல பேரின்பம்
செல்லும் வழியெங்கும்
இயற்கையின் வரவேற்பு
மேகத்தில் கலந்து
தேகத்தில் ஏறிய குளிர்

வழியெங்கும் வாகனங்களின் அணிவகுப்பு
இயற்கை சீரழிவு
வருங்காலத்தில் கொடைக்கானல்
கரும்மேகம் யெல்லாம்
கார்பன்-டை-ஆக்சைடாக
பிளாஸ்டில் கழிவுகளின்
கூடாரமாக மாறும் பேராபத்து !

நீண்ட் நெடிய கடிய மரங்கள்
ஊடால பாயும் வென்னிர மேகக் கூட்டம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சிவராஜ்-சிலிர்த்தெழுந்த சிங்கம்ல...

ஆஹா இதென்ன...
மூத்த சிங்கத்தின் முதிர்ச்சியான ஆட்டம்
பார்த்த எங்களுக்கு பயிற்சி ஆட்டம்
தெலுங்கு தேச ஹீரோவின் பெயரில்
பாதியை வைத்துகொண்டால் இப்படியா சார்!
அசத்தல் ஆட்டம் - ஓ போடு

ஸ்ருதி...
நானிலிருந்து புறப்பட்ட அம்பாய் (எவ்ளோ வேகம்...)
என்ன அது கயலா ! ? கண்களா!
முப்பெரும் தேவியராய் - நீங்கள் (ஸ்ருதி, ஆயிஷா, பூர்ணிமா)
கொடையை கலக்கிவிட்டு
கோடையை குளிர்ச்சியாக்கிவிட்டீர்கள்!
ஆடியா ஆட்டமென்ன...?

அன்னலட்சுமி...
ஆர்ப்பாட்ட லட்சுமியாய் !
ஆடவர்க்கு ஈடாக ஆட்டத்தில் !
நடு ரோட்டில் கலக்கிய காக்டெயில் !(பாவமாய் ஆனந்த்)
அங்கங்கே கேமராமேனாய் டாக்டர் (படம் நல்லா வந்திருக்கா சார்?
உங்களுக்கு தெரியுமா ?
ஹிப் டேன்ஸ் இலியானாவ
கிராப்பு வச்ச கோவை பாவை!
கலக்கிட்டீங்க புரபஸர்?

வனாந்தரத்தின் பிடியில்
தாவரத்தேவதைகளின் வனப்பு
மறைந்த முகங்களை காட்டும்
கண்ணாடி சிதறல்களாய்
புற்களின் நுனியில்..

வெள்ளையடித்த வானத்தில்
வண்ணம்தீட்ட நாங்கள்--பேரிஜம் நோக்கி
ஒத்தயடிப்பாதை வளைவு நெளிவுகளோடு
ஆரவாரமற்ற காட்டில்
ஆர்ப்பாட்டமாய் நாங்கள் மட்டும்
வனப்பு மிக்க காட்டெருமை
ஆஹா என்ன அழகு
நீண்டதொரு பயணம்
இளமையின் நீட்ச்சி !

ஆளில்லா பேரிஜம்
அற்புதத் மலைத்தீவு
இயற்கையின் இன்னுமொரு படைப்பு
மக்களின் குதூகலம்
மனதிற்கு இதம்

மதிய உணவு
புளியோதரையும், வெ.பிரியாணியும்
சாப்பிட்டு முடிக்குமுன்னே
ஸ்ருதியின் அலறல்
அட்டையில் அன்புப்கடியில்!
அட்டைக்கு இரத்தம் கொடுத்த
முதல் கொடை வள்ளல்.

மே முதல் நாள் என்பதால்
எங்களை சுற்றிக்காட்ட ஆளில்லை
நாங்களே சுற்றிக்கொண்டோம்
பேரிஜம் ஏரி, பேரின்ப நடைபாதை
முருகன் கோயில், முத்துக்களாய் நாங்கள்
சதுப்பு நிலம், சதிராடும் நாங்கள்!
சிரித்து விளையாடி சிந்தை குளிர்ந்தோம்
அட்டையின் பயம் மட்டும்
நாங்கள் வந்ததால் அட்டைக்கும் வேட்டை!

அந்தியில் திரும்பினோம்
அற்புத வனத்தைவிட்டு
நாங்களெல்லாம் பேருந்தில்
மனம் மட்டும் வனாந்தரத்தில் !

இரவு உணவு சொர்க்கத்தில்... அடுத்த பதிவில் ...

நிஜ கதாநாயகர்கள்

ரெம்ப நாளைக்கு அப்புறம் ஏற்கனவே எழுதி வச்சத இப்போ இங்க பதிவு பண்றேன். இது ஒரு முயற்சிதானே தவிர நான் கவிஜன் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இப்போ படியுங்கள்

மேற்குலக வீதிகளில் நிரந்தரமற்ற
அரிதார பூச்சுக்களுடன்
அலைந்து திரியும் முகங்களின்
ஒப்பனைக்கூட்டை களைத்தெறிந்த
அதிர்வுற்ற முகங்களின் அளவீடு !
குறியீடுகளில்...
துயரத்தில் வுழலும் நிழர்ப்பாவைகளின்

முகத்தில் வளர்ந்த ஆகாயத்தாமரைகளை
சவரம் செய்ய
கண்ணாடி சில்லுகளை கூர்தீட்டி
காதலர் தினத்தை புறந்தள்ளி
சேவை செய்ய வந்த
சிப்பியிநூடான நல்முத்துக்கள்
அரிதார பூச்சற்ற
நிஜ கதாநாயகர்கள்...

தமிழில் வாக்கியம் அமைக்க