Sunday, December 25, 2011

தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

எனக்கு போன வியாழக்கிழம (22 dec 2011 )காலையில ஒரு 11 : 50 க்கு ஒரு தொலைபேசி அழைப்பு " வேலாயுதம் சார் தான் பேசறீங்களா ?" 

நான் "ஆமாங்க என்னங்க வேணும் ?"

சார் நான் தி.நகர் D . C அலுவலத்திலிருந்து பேசறேன், நீங்க ஒங்க செல்போனே காணோம்னு மெயில் பண்ணீங்களா ?

ஆமாங்க ...

அந்த மொபைல் கெடசுடுச்சி..நீங்க வந்து வாங்கிக்கிறீங்களா ? எப்ப வருவீங்க ? ரொம்ப தூரத்தில இருக்கீங்களா சார் ?

ர்லதி.நக எங்க சார் ஆபீஸ் இருக்கு எதாவது லேன்ட் மார்க் சொல்லுங்க சார்.

தி.நகர் பஸ் ஸ்டாண்டு பக்கத்துல இருக்கு சார் .

ஓகே நான் இப்போ வர்றேங்க . நன்றி !

சரி இப்போ ஒரு சின்ன ப்ளாஷ் பேக்...

கடந்த ஆகஸ்டு மாதம் 13 ம தேதி நான் என் குடும்பத்தோட காளாஸ்திரி போலாம்னு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றோம் .
அங்கே பேருந்து வர தாமதமாகியதால் அங்கும் இங்கும் ஓடி விளையடிக்கொண்டிருந்த என் பையனை தூக்கி வைத்துகொண்டு அங்கிருந்த இரும்பு இருக்கையில் அமர்ந்தேன். என் பையன் என் மீது ஏறி விளையாடியதில் என் பேண்டு பாக்கெட்டில் இருந்த செல் போன் கீழே விழுந்து விட்டது . அந்த சமயம் பேருந்து வந்து விட குழந்தைகளை அழைத்துக்கொண்டு பையெல்லாம் எடுத்துகொண்டு (என்னடா அப்பா பொண்டாட்டி என்ன செய்தாள் என்று கேட்பது புரிகிறது. அவள்தான் சுமார் இரண்டு கிலோ எடையுள்ள  பையை மாட்டிகொண்டு வருகிறாளே! இன்னும் புரியவில்லை என்றால் திருமணமான ஆண்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ) பேருந்தில் இடம் பிடித்து பேண்டு பாக்கெட்டில் கைய விட்டா பாக்கெட்டுல துணி இருக்கு ஆனா என் மொபைல் போன காணோம், எனக்கு பயங்கர அதிர்ச்சி ஏன்னா அதில ஏகப்பட்ட என்னோட சொந்த விஷயங்களை சேமித்து வைத்திருந்தேன் (அது எவ்ளோ தப்பு ன்னு இப்போ நல்லா தெரிஞ்சுகிட்டேன் ) நான் ஒடனே பக்கத்துல இருந்தவரிடம் மொபைல் வாங்கி என் நம்பருக்கு போன் அடித்தால் எடுத்த புண்ணியவான் ஒடனே சுவிட்ச் ஆப் பண்ணிட்டான் போல பல முறை முயற்சி பண்ணியும் முடியல என்ன பன்றதுன்னு தெரியாம வேற ஒருத்தருகிட்ட போன் வாங்கி ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி என் நம்பர பிளாக் பண்ணிட்டேன் .எனக்கு மூடு போய்ட்டுது , ஆச ஆசையாய் செஞ்சுட்டு போன புளிசாததோட வீட்டுக்கு திரும்பிட்டோம் , இதில எம் போட்டட்டிக்கு வருத்தம் நெறயவே இருக்கும் ஏன்னா நாங்கள் கல்யாணம் பண்ணி ஒன்பது வருஷமா கேக்குறா ... நான்தான் இதோ அதோ ன்னு இழுத்துகிட்டே வந்துட்டேன் ( இன்னமும் போகலங்கிறது வேற விஷயம் ) இருந்தாலும் எனக்காக எல்லோருமா வீட்டுக்கு இன்னொரு ஆட்டோ புடிச்சிகிட்டு வீடு வந்துட்டோம். இது எல்லாம் காலையில வீட்டுல இருந்து கெளம்பன ஆறு மணியில இருந்து மறுபடியும் வீட்டுக்கு வந்த எட்டு மணிக்குள்ள முடிஞ்சு போச்சு .

அப்புறம் அவசர அவசரமா கோடம்பாக்க பூர்விகா வந்தா அவங்க இன்னும் கடையே அப்பத்தான் தொறந்தாங்க. சரி புதுசா ஒரு மொபைல கிரெடிட் கார்டுல தேச்சி வாங்கிட்டு பக்கத்துலையே ஏர்டெல் ஷாப் ல ஒரு டூப்ளிகேட் சிம் கர்ட வாங்கி வந்துட்டு டென்ஷன் ல என்ன பன்றதுன்னு தெரியாம குடும்பத்தோட வளசரவாக்கம் பாண்டியன் ஹோட்டல் ல அசைவ சாப்பாடு சாப்பிட்டோம் ( பொண்டாட்டி புள்ளகளுக்கு திரும்பி வந்த சோகம் தெரியாமலிருக்க )

அடுத்த நாள் காலையிலேயே  போலிஸ் ஸ்டேஷன் ல பிராது கொடுக்காம்னு கே .கே. நகர் போலீஸ் ஸ்டேஷன் க்கு போனேன் அவங்க "நீங்க  கோயம்பேட்டுலதானே தொலச்சிங்க அதனால கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்க ன்னு சொல்ல நான் நேரா கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷன் பொய் எல்லாவற்றையும் எழுதி தொலைந்துபோன மொபைல் பற்றின டீடைல்ஸ் (என்னிடம் மொபைலோட IMRI நம்பர் இருந்தது நல்லதா போச்சு )ஒரு பிராது கொடுத்துட்டு வந்தேன் .

அத்தோட விடாம இன்டெர் நெட்ல தேடி ஒரு மெயில் ஐடி கண்டு பிடிச்சேன் அந்த ஐடிக்கு எல்லா விபரமும் டைப் பண்ணி அதாவது என்னோட மொபைல் வாங்கின தேதி, மொபைல் மாடல்,  என்ன கம்பனி, மொபைலோட IMRI நம்பர், கடைசியா யாருகிட்ட பேசினது அல்லது sms அனுப்பனது ன்னு எல்லா விபரமும் டைப் பண்ணி அனுப்பனேன் . இந்த மெயில் தான் எனக்கு என் மொபைல் போன கண்டு பிடுத்து தந்தது.

இதெல்லாம் முடிந்து நாலு மாதம் ஆயிட்டுது நானும் கொஞ்ச கொஞ்சமா மறந்து கிட்டு இருந்தேன் . இந்த சாதாரண மொபைல் போன போயி கண்டு பிடித்து தருவாங்களான்னு நெனைச்சு விட்டுட்டேன் . அப்புறம் ஏன்டா கம்ளைண்டு இவ்ளோ எல்லாம் பண்ணேன்னு கேகுறீங்களா எல்லாம் ஒரு அவாதான் . ஒழச்ச காசுல வாங்கினது கேடச்சுடும்னு ஒரு நம்பிக்க ....

அப்புறம் என்னடான்னா திடீர்னு மேலே சொன்னது போல போன் கால், மொதல்ல என்னால நம்ப முடியல அதே சமயம் உள்ளூர ஒரு சந்தோசம் ....
ஒடனே ஆபிஸ்ல நண்பர்கள்ட்ட சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷன் க்கு கேளம்ம்பிட்டேன்.

கரைக்டா போயிட்டேன் கீழ ஒரு பெண் போலீஸ் இருந்தாங்க அவங்க கிட்ட விபரத்த சொல்லு அங்கிருந்த நோட் புக்குல என்னோட பேரு அட்ரெஸ், யார பாக்கபோறேன் இந்த விபரங்களை எழுதிட்டு முதல் மாடிக்கு போனேன் இங்கிருந்த அறையில் முன்னாடி ஒரு கம்யூட்டரில் அமர்து இருந்தவரிடம்  (அவர் பேரு திரு . புருஷோத்தமன் , கான்ஸ்டபில்) கேட்டேன் , அவர் நீங்க வேலாயுதமா ன்னு கேட்டு அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர சொன்னார் .

பிறகு வேறு ஒருவரை அழைத்தார் , அவர் சுமார் சப் -இன்ஸ்பெக்டர் திரு. சிவக்குமார் , சுமார் முப்பத்தைந்து லிருந்து நாற்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர், எல்லோரும் மப்டியில் தான் இருந்தார்கள் . அவர் வந்து அவர் சேரில் அமர்த்து ரொம்ப பொறுமையாக, நாகரிகமாக , அழகாக, ரொம்ப நட்புடன் விசாரித்தார், எப்படிங்க தொலைச்சிங்க ன்னு அக்கறையோட விசாரித்தார், நான் எல்லாவற்றையும் சொன்ன வுடன் எனக்காக வருத்தபட்டார் . இதெல்லாம் எனக்கு பெராச்சரியமாக இருந்தது . ஏன் என்றால் சாதரணமாக போலிஸ் என்றாலே வேறு ஒரு எண்ணம் நம் எல்லோர் மனதிலும் இருக்கும் , அதையெல்லாம் தவிடுபொடியாக்கி ஒரு போதுசனத்திடம் இவ்வளவு பொறுமையாக ஒரு சப் - இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார் என்றால் இருக்காதா பின்னே ,

பின்பு அந்த செல் போனை கண்கொண்டு பிடித்த விபரங்களை சொன்னார், அதை கண்கொண்டு பிடிக்க அவர்கள் எங்கெல்லாம் போனார்கள் எப்படி தேடினார்கள் , சொல்லும்போது என்னடா சாதாரண இந்த போனுக்காக இவ்ளோ அலைஞ்சி இருக்காங்களே ன்னு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் நம்ம போன் கெடைச்ச சந்தோசம் ....இதை தான் அவரும் சொன்னார் ... சார் உங்க போன் நாங்க கண்டுபிடிக்க ஆன மதிப்பு கூட இல்லாம இருக்கலாம் ஆனா அத ஒங்ககிட்ட கொடுத்த ஒடனே நீங்க அடியிற சந்தோசம்   அதான் சார் எங்களுக்கு சந்தோசம் மனு சொன்னாரு. தயவு செய்து முக்கியமான தகவல்களை போனில் வைக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து" டீ" சாப்டுறீங்களா ன்னு அன்பா கேட்டு அனுப்பியது என்னால் மறக்க முடியாது .

இந்த மாதிரியான நல்ல கடமை தவறாத மக்களுக்கு சேவை செய்ய காத்திருகுக்கும் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் போன்ற நல்லவர்களை ஊக்குவிப்போம் .

கடமை தவறாத தமிநாடு காவல் துறைக்கு ஒரு சல்யூட் !

நன்றி !


Monday, November 21, 2011

வில்லன் நடிகர் S.A. அசோகனை மறக்காத ரசிகர் !

 
இன்று மதியம் சாப்பாட்டை முடித்து விட்டு கொஞ்சம் வெளியே நடந்துவந்த போடு அந்த போஸ்டர் என்னை ஈர்த்தது, என்ன வென்று அருகே சென்று பார்த்தபோது மறைந்த வில்லன் நடிகர் அசோகன் அவர்களின் 29 வது நினைவு தினத்தை கூறும் விதமாக இருந்தது, எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது.

S.A. அசோகன்,  இந்த பெயர் இன்றைய தலைமுறை விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு பரிச்சயம் இல்லாத பெயராக இருக்கலாம். ஆனால் அறுபது எழுபதுகளில் ஏறக்குறைய அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இந்த பெயர் மறந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

அவர் தான் மறைந்த வில்லன், குணசித்திர, நகைச்சுவை (பிற்காலத்தில்) நடிகர் S.A. அசோகன், அந்த காலத்தில் அவருடைய வசன உச்சரிப்பு, அவரின் அந்த ஒருவிதமான வசனம் பேசும் தன்மை, அதை இன்றைக்கும் பல குரல் கலைஞர்கள் பலர் மேடைகளின் பேச கண்டிருக்கிறோம்,

அதெல்லாம் சரி இதெல்லாம் இப்போ என்னவென்று கேட்பது எனக்கும் கேட்கிறது...

இந்த மதம் நவம்பர் 19 . நடிகர் S.A. அசோகன் மறைந்த நாள்,......ஓகே இப்ப அதுக்கென்ன... அதுக்கென்னவா நமக்கு எத்தன பேருக்கு அது தெரியும் ...சரி ... தெரிஞ்சுக்கற அளவுக்கு அவர் என்ன அவ்ளோ பெரிய ஆளா... இல்லைதான் ஆனா அற்புதமான ஒரு நடிகர். எனக்கு அன்பே வா படம் பாக்குறப்ப பாதி படத்துக்கு மேலதான் வருவாரு ஆனா அவர நான் எம்.ஜி. ஆர். தம்பியா ன்னு கேட்டு இருக்கேன் அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் கொஞ்சம் உருவ ஒற்றுமை யா பாக்கலாம் .

அவருக்கு நவம்பர் 19 - தோடு 29 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை அவருடைய ரசிகர் ஒருவர் சென்னையில் இன்றும் நினைவில் வைத்து எஸ். நீலகண்டன் என்பவர் போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டி நினைவு தினத்தை அனுசரிக்கிறார், இது மறைந்த வில்லன், குணசித்திர நடிகர் அசோகனின் குடும்பத்தாருக்கு தெரியுமா என்று கூட தெரியாது.


நடிகர் S.A. அசோகன் 1961 ல் வெளியான கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.  திருச்சியை சொந்த ஊராக கொண்ட அவர், திருச்சி ஜோசெப் கல்லூரியில் தனது பட்ட படிப்பை முடித்து சிறு சிறு நாடங்களின் நடித்துக்கொண்டிருந்த பொது அவருடைய நண்பர்களான பாலாஜி மற்றும் ஜெமினி கணேசன் மூலம் திரைப்படத்துறைக்கு நுழைந்தார். அவ்வையார் திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் கூட நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் MGR, A. V. M. சரவணன், ஜெய்சங்கர், திருலோகச்சந்தர் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார்.

பிற்பாடு அவருடைய சொந்த பெயரான "அந்தோணி" ஐ இயக்குனர் T .R .  ராமண்ணா தான் அவருடைய மணப்பந்தல் என்ற திரைப்படத்தில் "அசோகன்" என்று பெயரை மாற்றினார்.

இவர் ஒரு  கோயம்புத்தூரை சேர்ந்த சரஸ்வதி என்ற  பிராமண பெண்ணை காதலித்து கல்யாணமும் செய்ய விரும்பினார் ஆனால் பெண் வீட்டில்  பக்கத்த எதிர்ப்பு. என்ன செய்யறது பெண்ணை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிருத்துவ தேவாலயத்தில் சரஸ்வதி என்ற பெயரை மேரிஞானம் என்று மாற்றி எம்.ஜி. ஆர், திருலோகச்சந்தர், மற்றும் சரவணன் உதவியோடு திருமணம் செய்துகொண்டார்.

இவர் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்" என்ற பாடலை தனது சொந்த குரலில் பாடயுள்ளார். மேலும் இது சத்யம், தெய்வ திருமகள், காட்டு ராணி,  கார்த்திகை தீபம், வல்லவனுக்கு வல்லவன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதன் பிறகு வில்லன் பாத்திரத்திலும், நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்திலும் நடித்தார். எம்.ஜி. ஆர். உடன் ஏறக்குறைய 80 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.



கடையாக 19-11-1982 அன்று இரண்டாவது முறையாக ஏற்பட்ட இதய பாதிப்பால் தனது 52  வது வயதிலேயே இவ்வுலகை விட்டு பிருந்து சென்றார். அவர் மறைந்து 29 ஆண்டுகள் ஆனாலும் அவரை மறக்காத, அவரின் நடிப்பை பார்த்து இன்னமும் மறக்காத நமது நீலகண்டன் போன்ற ரசிகர்கள் இருக்கும் வரை அசோகன் என்ற நடிகர் நம்மை விட்டு போகமாட்டார் என்பது அப்பட்டமான உண்மை.

வாழ்க அண்ணாரின் புகழ் !

நன்றி !

(எதோ எனக்கு தெரிந்த தகவல்கள் அடிப்படையில் கொஞ்சம் எழுதி உள்ளேன் மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள் இன்னமும் எழுதினால் மகிழ்ச்சியே !)

- யாகார்.

Monday, November 14, 2011

என் பள்ளி ! - பாகம் - 1

என் பள்ளி !


திரு வி கல்யாண சுந்தரம் நடுநிலைப பள்ளி, அரும்பார்த்தபுரம், வில்லியனூர் கொம்யூன், புதுச்சேரி.

அற்புதமான அந்த நினைவுகள் இன்னமும் இன் வனாந்தர தேவதைகள் சூழ்ந்த என் இதயத்தில் செங்குருதி பாய என்னை இளமையாக வைத்துள்ளது.

அந்த இனிப்பான பழம் தரும் புளியமர நிழலும், சுற்று சுவர் இல்லாத வகுப்பறைகள், பள்ளியை ஒட்டிய ரயில் பாதை அது அப்போ அப்போ புகையை கக்கிகிட்டு போகும்போது நாங்கள் பாடங்களை கவனித்து கொண்டு அனிச்சையாய் கையை ஆட்டும் அந்த நாட்கள்...

காலையில்  தமிழில் பிரேயர் ஓய்ந்து நில் (Stand at is)  உறுதிகொள்   (Attention) என தொடங்கி
தமிழ்த்தாய் வாழ்த்து "வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே ! என ஆரம்பித்து  தினம் ஒரு மாணவன் ஒரு திருக்குறள் சொல்லி  அதற்க்கு விளக்கமும் சொல்லுவான். திங்கள் கிழமை தாயின் மணிக்கொடி பாரீர் ! என    கொடிவணக்கம் செலுத்தி களைந்து செல் (
disburse ) என முடியும்.

நல்ல நெத்தில விபூதி பட்டய போட்டுக்கிட்டு சைடு வகுடு எடுத்த தலையோட அப்போ பாண்டியில வி எஸ் டி ஜவுளி கட பயில புத்தகத்த தூக்கி சில சமயம் பையோட காத்து பிச்சுக்கும்,  அப்படியே சும்மா ஜாலிய அந்த ரோட்டோரமா நடந்து வர சோகமே தனிதான்.

எனக்கு நல்ல தெரியும் ஒரு காகி கலர் கால்சட்ட வெல்ல கலர் மேல்சட்ட, தரையில ஒக்காந்து தேச்சு தேச்சு பின்னால பஞ்சர் ஆகி ஒதுக்கு ஒட்டு போட்டு இருப்பேன் நான் மட்டும் இல்ல நெறைய பசங்க...எனக்கு தெரிஞ்சு நான் ஒன்பதாவது படிக்கறப்ப தான் ஜட்டி போட்டேன்னு நெனக்கிறேன், சில சமயத்துல பசங்க ஒன்னுக்கு முட்டிகிட்டு பல்லா  கல்லா கட்டும்போது  அத அழுத்தி அழுத்தி பசங்க படுற பாடு சிரிப்பா வரும் கால்சட்டைல ஜிப்புலாம் கெடயாது பட்டன் தான் அதுவும் இருக்காது அப்போ பாக்கணுமே பசங்கள எப்படா இன்டர்வெல் விடுவாங்கன்னு இருக்கும்.

இன்டர்வெல் விட்ட ஒடனே....

எனக்கு ஒண்ணாம் வகுப்பு நினைவுகள் அவ்வளவாக நினைவில் இல்லை என்றாலும் இரண்டாம் வகுப்பு நினைவுகள் கொஞ்சம் ஞாபகம் இருக்கு.

எங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை மற்றும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு இவிகளுக்கு மட்டுமே செங்கற்களால் ஆன கட்டிடம் மத்த வகுப்புகள் எல்லாம் கூரைகள் தான். ஆனா எங்கள் தலைமை ஆசிரியர் அறைக்கு வலது புறம் இருந்த இரண்டு அறைகள் கொண்ட வகுப்புகள் கற்களால் கட்டப்பட்டது. அதில் இரண்டாவது அறையில் தான் என் வகுப்பு. எங்கள் வகுப்பை  ஒட்டினாப்போல சமையல் கட்டு. தரையில் தான் உட்காரவேண்டும். என் சக வகுப்பு தோழர்கள் பட்டாபி(இப்போது இவ்வுலகில் இல்லை )ரஜினி, தர்மலிங்கம், கங்காதரன், தனலக்ஷ்மி, சிவராமன், பாலு, சிட்டு குருவி (உண்மையான பேர் தெரியவில்லை), அசோகன், சிவப்பிரகாசம்(இவனுக்கு தனி கதை இருக்கு ), உமா , திலகம், நிர்மலா, கணபதி, சுந்தரராஜன், காஞ்சியப்பன்( தற்போது இவ்வுலகில் இல்லை ), செந்தில், பரந்தாமன், பிரபு , ராமலிங்கம், பர்மாவதி, கோவிந்தம்மாள், வாணி, பாக்கியலக்ஷ்மி, வெண்ணி சாமி, அசோகன், ராஜன் இன்னும் கொஞ்சம் பேர் எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை.

பட்டாபி இவன் அப்போது அவன் வீட்டுக்கு தெரியாமல் தினம் தினம் வெண்ணை, அமுல் பால் பவுடர் எல்லாம் கொண்டுவருவான். என்னாடான்னா அவங்க அம்மா ஏதோ பால் சம்மந்தமா வேலை செய்யறாங்க. நான்தான் பெரும்பாலும் வகுப்புக்கு சீக்கிரம் வருவேன். பட்டாபி அடிக்கடி கொண்டுவரும் திண்பண்டங்களுக்காக ஒரு கூட்டம் அவன் பின்னாடியே காலையில சுத்தும். அவனவன் பட்டாபி கொஞசமா கொடுக்கறத வழிச்சி நாக்கில நக்கிப்பானுங்க.

தமிழில் வாக்கியம் அமைக்க