எந்நேரமும் எக்காலத்திலும் காவிக்கொடி
பறக்கவிட்டால் பட்டுப்போய்விடும்
நம்மவர் வாழ்வு !
ஆன்மீக வெற்றிடம் அதிபயங்கரமானது
ஆதலினாலே தேவை ஒரு சாமியார் !
வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ள
முன்னவர் போலியானபோதும் !
சரச சல்லாப ஆன்மீகப் பயிற்சி
வாழ்வின் சராசரி இன்பங்களின்
ஆபாச கிளர்ச்சி !
சம்சாரியின் துறவு சன்யாசம்
சகலமும் வரவு இன்றைய
சாமியார் வசம் !
மாற்றான் தோட்டத்து மல்லிகை
மனக்கத்தான் செய்யும் - அது
சாமியாரின் ஆசிரமதோட்டத்தில்...
ஆண்டவனே(!) அனுபவிக்கும்போது
சரச சல்லாப ஆன்மீகப் பயிற்சி
வீட்டினுல்லே இருக்கும்வரை சந்தொசம்
வீதிக்கு வந்த போது விபச்சாரம்.
-யாகார்