பாஞ்சாலி சபதம் தெருக்கூத்து
அரிதார முகங்களின்
ஆர்ப்பரிக்கும் வரலாற்று வசனங்கள்
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
புரிந்து கொள்ளும்படி
வஞ்சகத்தை வாழ்க்கையாக்கி
வாழ்ந்த சகுனி மாமா
பிளிறு போல் வந்தமர்ந்த பீமன் தோரணை
தோற்றுப்போன விரக்தியில் தருமன்
அவனையே திட்டிய திரௌபதி
பெட்ரோமாஸ் வெளிச்சத்தில்
பதிந்து விட்ட வரலாறு
அடித்து வைத்த கூடாரங்கலாய்
மக்கள் கூட்டம் ...
--யாகார்
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்லுங்கள்...